நண்பர் ஆரூரன் விசுவநாதன் அவர்களின் இடுகையை படித்தவுடன் இன்னும் நிறையப் பேருக்குச் சென்று சேரவேண்டியது அவசியம் எனக் கருதியதால் உங்களுக்காக இங்கே
கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி
ஆரூரான் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Monday, February 15, 2010
Thursday, February 4, 2010
எதிர்காலம் குறித்த அச்சம் (மனதை....பகுதி இரண்டு)
எதிர்காலம் குறித்த அச்சம்
எதிர்காலத்தில் நாம் எப்படி வரவேண்டும், வாழவேண்டும் என திட்டமிடுதல், அதன்படி வாழ்தல் என்பது வேறு. ஆனால் எதிர்காலத்தில் எப்படி ஆவோம், அல்லது வாழ்வோமோ என்ற அச்சம் அறவே கூடாது.
இந்த அச்சம் ஏன் வருகிறது?. போதுமான விளக்கமும், விழிப்பும் அறிவுக்கு கிடைக்காததே..
விதியின் பிடியில், மாயையின் பிடியில், மனதின் பிடியில் சிக்கிக்கொண்டு மனம் போன போக்கில் வாழ்கிறோம். எந்தவித திட்டமிடுதலும் இல்லை. ஆனால் வருமானம் வாடகை, வட்டி, தரகு என்றோ அல்லது தொழில் நல்ல முறையில் நடப்பதாலோ வருமானம் வந்து குவியும்.
இதனால் எதிர்காலம் குறித்த அச்சம் நிச்சயம் வரும்.
இதற்கு எந்த கடவுளும் காரணமல்ல..ஜாதகமும் காரணம் அல்ல.
பெரும்பாலும் நாமும், பெற்றோர் வழியிலான வினைப்பதிவு தொடருமே காரணம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் வினைப்பதிவுடன் கூடிய நமது வாழ்க்கை, ஒரு சேமிப்பு வங்கி கணக்குக்கு அப்படியே ஒப்பிடலாம்.
பணம் போட்டால் பதிவு, எடுத்தால் பதிவு, போட்ட பணத்திற்கு வட்டி வந்தால் வரவுப்பதிவு, குறைந்த பட்ச இருப்பு இல்லையென்றால் அபராதக் கட்டணம் பற்று பதிவு.
கற்பனை செய்யுங்கள். சில இலட்சங்கள் இருப்பிலிருந்தால் பணம் எடுத்துக் கொண்டே இருந்தால் கொஞ்சநாள் கழித்து இருப்பு குறைந்து அபராதம் வரும், மாறக குறைந்த பட்ச இருப்புதான் என்றால் ஒரு முறை பணம் எடுத்த உடனே அபராதப்பதிவுதான். இதுதான் வினைப் பதிவு, செயல்விளைவுத்தத்துவம் எல்லாம் :))
எதிர்காலம்(வினைப்பதிவுகளின் இருப்பு) இயற்கையின் கையில் உள்ளது. அது எந்த அதிசயத்தையும் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிகழத்தலாம். எந்த அற்புதத்தையும் நம் வாழ்வில் உருவாக்கும்.
அதேசமயம் எதிர்காலம் என்பது நமது அறிவு, திறமை, நம்பிக்கை, முயற்சி, இயற்கையின் ஒத்துழைப்பு போன்ற பலவித அம்சங்களால் தீர்மானிக்கப்படும். அற்புதமாக மாறும் என்பதையும் புரிந்து கொள்வோம்.
நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எண்ண்ங்களை எண்ணுவோம், செயல்களைச் செய்வோம், நல்ல விளைவுகளை அனுபவிப்போம். இதற்கு பெயர் நம்பிக்கை அல்ல. என்னைப் பொறுத்த வரை இதுவே வாழ்க்கை கணிதம், இதுவே வாழ்க்கை அறிவியல்.
வாழும் நுட்பத்தை அறிந்து கொண்டு உங்கள் விருப்பம்போல் அமைத்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும், மனதின்ஆற்றல் பெருகும். உற்சாகமாக இருக்கலாம்.
எதிர்காலத்தை எண்ணி எந்த நேரமும் அச்சம் கொள்வது.. அவநம்பிக்கை கொள்வது, மனதை விட்டு அகற்ற வேண்டியது அவசியம்.
எதிர்காலத்தில் நாம் எப்படி வரவேண்டும், வாழவேண்டும் என திட்டமிடுதல், அதன்படி வாழ்தல் என்பது வேறு. ஆனால் எதிர்காலத்தில் எப்படி ஆவோம், அல்லது வாழ்வோமோ என்ற அச்சம் அறவே கூடாது.
இந்த அச்சம் ஏன் வருகிறது?. போதுமான விளக்கமும், விழிப்பும் அறிவுக்கு கிடைக்காததே..
விதியின் பிடியில், மாயையின் பிடியில், மனதின் பிடியில் சிக்கிக்கொண்டு மனம் போன போக்கில் வாழ்கிறோம். எந்தவித திட்டமிடுதலும் இல்லை. ஆனால் வருமானம் வாடகை, வட்டி, தரகு என்றோ அல்லது தொழில் நல்ல முறையில் நடப்பதாலோ வருமானம் வந்து குவியும்.
அப்போது இந்த பணம் ஏன் நமக்கு வருகிறது.? எந்த வழியில் வருகிறது.? இதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லை என்றாலே நாம் விதியின் பிடியில் இருக்கிறோம் என்று பொருள்.
"கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் இவை
எனும் தெளிவும் இலார் " என்பார் பாரதி.. வாழ்வில் துன்பம், கஷ்டம் வரும்போது இது ஏன் வந்தது என சிந்திக்க தெரியாததால்தான் அப்படியே வாழ்கிறோம்.
இதனால் எதிர்காலம் குறித்த அச்சம் நிச்சயம் வரும்.
இதற்கு எந்த கடவுளும் காரணமல்ல..ஜாதகமும் காரணம் அல்ல.
பெரும்பாலும் நாமும், பெற்றோர் வழியிலான வினைப்பதிவு தொடருமே காரணம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் வினைப்பதிவுடன் கூடிய நமது வாழ்க்கை, ஒரு சேமிப்பு வங்கி கணக்குக்கு அப்படியே ஒப்பிடலாம்.
பணம் போட்டால் பதிவு, எடுத்தால் பதிவு, போட்ட பணத்திற்கு வட்டி வந்தால் வரவுப்பதிவு, குறைந்த பட்ச இருப்பு இல்லையென்றால் அபராதக் கட்டணம் பற்று பதிவு.
கற்பனை செய்யுங்கள். சில இலட்சங்கள் இருப்பிலிருந்தால் பணம் எடுத்துக் கொண்டே இருந்தால் கொஞ்சநாள் கழித்து இருப்பு குறைந்து அபராதம் வரும், மாறக குறைந்த பட்ச இருப்புதான் என்றால் ஒரு முறை பணம் எடுத்த உடனே அபராதப்பதிவுதான். இதுதான் வினைப் பதிவு, செயல்விளைவுத்தத்துவம் எல்லாம் :))
ஆக வங்கிக் கணக்கில் என்ன பதிவு செய்ய வேண்டும் என்பது நம் கையில் உள்ளது, நமக்கு வேண்டியது வட்டி வரவா அல்லது அபராதமா என நாம் தீர்மானிப்போம். இதுதான் முயற்சி..
எதிர்காலம்(வினைப்பதிவுகளின் இருப்பு) இயற்கையின் கையில் உள்ளது. அது எந்த அதிசயத்தையும் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிகழத்தலாம். எந்த அற்புதத்தையும் நம் வாழ்வில் உருவாக்கும்.
அதேசமயம் எதிர்காலம் என்பது நமது அறிவு, திறமை, நம்பிக்கை, முயற்சி, இயற்கையின் ஒத்துழைப்பு போன்ற பலவித அம்சங்களால் தீர்மானிக்கப்படும். அற்புதமாக மாறும் என்பதையும் புரிந்து கொள்வோம்.
எதிர்காலம் குறித்து அச்சம் கொள்வதும், அவநம்பிக்கை கொள்வதும் மனதுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாகும்.
நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எண்ண்ங்களை எண்ணுவோம், செயல்களைச் செய்வோம், நல்ல விளைவுகளை அனுபவிப்போம். இதற்கு பெயர் நம்பிக்கை அல்ல. என்னைப் பொறுத்த வரை இதுவே வாழ்க்கை கணிதம், இதுவே வாழ்க்கை அறிவியல்.
வாழும் நுட்பத்தை அறிந்து கொண்டு உங்கள் விருப்பம்போல் அமைத்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும், மனதின்ஆற்றல் பெருகும். உற்சாகமாக இருக்கலாம்.
Tuesday, February 2, 2010
மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள.. பகுதி ஒன்று
கடந்த காலத்தில் நமது வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வருந்துவது மனத்திலிருந்து எடுத்தெறிய வேண்டிய தொல்லைகளில் முதன்மையானது.
நம் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒருவகையில் நம் மனதிற்கோ, உடலுக்கோ துன்பம் தரும் நிகழ்வுகள் நடந்திருக்கும்.. நம்மை காத்து வளர்த்த தாய்,தந்தை, நெருங்கிய உறவினர் மறைந்திருக்கலாம்.
தொழில் சூழ்நிலைகளினால், பல்வேறு காரணங்களினால் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். மிகவும் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்,
பிறர் நம்மை புரிந்து கொள்ளாமல் அவமதித்திருக்கலாம்,
இந்த விசயங்கள் எல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாக, ஒரு அனுபவமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அளவில் ஆராய்வதோடு, உணர்ந்து கொள்வதோடு, யோசித்து முடிவெடுப்பதோடு நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
மாறாக நினைத்து நினைத்து வருந்துவது, கவலைப்படுவது என்பது நமது மனம் நிகழ்காலத்தில் இயங்குவதை தடுத்து இறந்தகாலத்தில் சஞ்சரிக்கும் நிலையையே ஏற்படுத்தும்.
விளைவு இனிமேல் நடக்க வேண்டிய செயலில் நம் கவனம் சிதறும். நமது செயல்வேகம் குறையும். உறவுகளில் சிக்கல்கள் நம்மால் வரலாம். பலன் இதிலும் இன்னும் நட்டம், இழப்பு, இந்த நிலை நமக்கு தேவையா? என சிந்திப்போம்.
மீண்டும் மீண்டும் அதை நினைத்து வருந்துவதால் நேரம் வீணாவதோடு மனம் இன்னும் பல்வீனமடைகிறது. அது அதிகமாகிறபோது அது உடல் நோயாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.
ஏனெனில் நடந்து முடிந்த ஒரு செயலை யாராலும் மாற்ற முடியாது. என்ன வருத்தப்பட்டாலும் நடந்தது நடந்ததுதான். போனது போனதுதான். அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய அடுத்த கட்டத்திற்கு நம்மால் முன்னேற முடியாது
இதற்கு மனதை வேறு பல நல்ல வழிகளில் திருப்பலாம். எந்த வழி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..
அருள்கூர்ந்து, நடந்து முடிந்த துன்ப அனுபவங்களை மனதிலிருந்து அகற்றுங்கள். இதுவே பலவழிகளிலும் நாம் முன்னேற வழி.
வாழ்த்துகள்
Monday, January 25, 2010
திருப்பூரில் புத்தகத் திருவிழா - 2010
அன்பு நண்பர்களே,
திருப்பூரில் கடந்த ஆறுவருடங்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி இந்த வருடமும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறப் போகிறது. இந்த செய்தியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
(படத்தின் மீது ’க்ளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கலாம்)
வாய்ப்பும் வசதியும் இருக்கிற அன்பர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுக..:))
திருப்பூரில் கடந்த ஆறுவருடங்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி இந்த வருடமும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறப் போகிறது. இந்த செய்தியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
(படத்தின் மீது ’க்ளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கலாம்)
வாய்ப்பும் வசதியும் இருக்கிற அன்பர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுக..:))
திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், ஏழாம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருப்பூர் கே.ஆர்.சி., சென்டரில் நாளை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது; தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடக்கிறது. தமிழகத்தின் முன் னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர் கள் என, 72 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இந்நிறுவனங்கள் அமைக்கும் 94 ஸ்டால்களில், குழந்தை இலக்கியம், அறிவியல், கலை, இலக் கியம், மொழி, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், தத்துவம், மதம், ஆளுமை, கதை, நாவல்கள் என, அனைத்து பிரிவுகளிலும் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.கண்காட்சி வரவேற்புக்குழு தலைவர் துரைசாமி, செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் நிசார் அகமது ஆகியோர் கூறுகையில், "ஜெய்வாபாய் பள்ளியில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவியர் கண் காட்சி விழா மேடையில் பேச உள்ளனர். தினமும் குறும்படங்கள் ஒளிபரப்பப்படும்,' என்றனர்.
வாழ்த்துகள்
Sunday, January 24, 2010
படித்ததில் பிடித்தது 24/01/2010
கூடுசாலை நண்பரின் இடுகை நாம் பரிசோதனை எலிகள் இல்லை
//இந்த மலட்டு விதைகளை கொண்டு நம் விவசாயிகள் மீண்டும் விதைக்கமுடியாது. விளைவு விவசாயிகள் விதைகளுக்கு மீண்டும் அந்த நிறுவனத்தையே அண்டியிருக்க வேண்டும். நம் முன்னோர்கள் “விதைகள்” என கொஞ்சம் தானியங்களை தலைமுறை தலை முறையாய் காப்பாற்றி நம் கைகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கும் தானிய ங்களை இழந்துவிட்டு விதைக்காக வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட நிறுவனங்களிடம் நிற்கவேண்டும்.//
பெரிய அளவில் பணம் பண்ணுவது என்பது மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தோடு, ஒரு நாட்டின் விவசாயத்துறையையே மலடாக்கத்துடிக்கும் இயல்பு கண்டு மனம் கொதிக்கிறது.. நீங்களும் படித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
***********************************************
அடுத்தது ஒரு தொழில்நுட்பம்....
இன்டர்நெட் விரும்பியா? உஷார் ஜெர்மன் அரசு எச்சரிக்கை
பெர்லின் : இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக உள்ளதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டதை தொடர்ந்து, அதற்கு மாற்றாக வேறு இணைப்பை பயன்படுத்துமாறு, ஜெர்மன் அரசு, அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் இணையதளங்களில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் இணையதளங்களை, சீனா திருடி வருவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து, கூகுள் போன்ற இணையதள இணைப்பிற்கு செல்ல பயன்படுத்தும், இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக இருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டது.எனினும், இணையதள பயன்பாட்டாளர்களுக்கு, இதனால் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு, இணையதள பயன்பாட்டாளர்களுக்கு தீவிர அபாயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு அமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தது.
இதுகுறித்து, ஜெர்மன் நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகம் அல்லது பி.எஸ்.ஐ., கூறியதாவது:ஜெர்மனியர்கள், எக்ஸ்புளோரரின் அனைத்து வெர்ஷன்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிகரித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், தாக்குதல்கள் நடத்துவது என்பது சிறிது கடினமானது; ஆனால், முழுவதுமாக பாதுகாப்பு அளிக்காது. எனவே, இணையதளத்தை பயன்படுத்தும், ஜெர்மனியர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக வேறு பிரவுசரை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தாமஸ் பாம்கார்ட்னர் கூறுகையில்,"ஜெர்மன் அரசின் எச்சரிக்கை குறித்து, மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூகுள் இணையதளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், குறிப்பிட்ட நோக்குடன், பெரியளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள், சாதாரண மக்கள் அல்லது நுகர்வோர்களுக்கு எதிராக நடைபெறாது'
நன்றி: தினமலர்
//இந்த மலட்டு விதைகளை கொண்டு நம் விவசாயிகள் மீண்டும் விதைக்கமுடியாது. விளைவு விவசாயிகள் விதைகளுக்கு மீண்டும் அந்த நிறுவனத்தையே அண்டியிருக்க வேண்டும். நம் முன்னோர்கள் “விதைகள்” என கொஞ்சம் தானியங்களை தலைமுறை தலை முறையாய் காப்பாற்றி நம் கைகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கும் தானிய ங்களை இழந்துவிட்டு விதைக்காக வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட நிறுவனங்களிடம் நிற்கவேண்டும்.//
பெரிய அளவில் பணம் பண்ணுவது என்பது மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தோடு, ஒரு நாட்டின் விவசாயத்துறையையே மலடாக்கத்துடிக்கும் இயல்பு கண்டு மனம் கொதிக்கிறது.. நீங்களும் படித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
***********************************************
அடுத்தது ஒரு தொழில்நுட்பம்....
இன்டர்நெட் விரும்பியா? உஷார் ஜெர்மன் அரசு எச்சரிக்கை
பெர்லின் : இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக உள்ளதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டதை தொடர்ந்து, அதற்கு மாற்றாக வேறு இணைப்பை பயன்படுத்துமாறு, ஜெர்மன் அரசு, அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் இணையதளங்களில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் இணையதளங்களை, சீனா திருடி வருவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து, கூகுள் போன்ற இணையதள இணைப்பிற்கு செல்ல பயன்படுத்தும், இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக இருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டது.எனினும், இணையதள பயன்பாட்டாளர்களுக்கு, இதனால் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு, இணையதள பயன்பாட்டாளர்களுக்கு தீவிர அபாயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு அமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தது.
இதுகுறித்து, ஜெர்மன் நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகம் அல்லது பி.எஸ்.ஐ., கூறியதாவது:ஜெர்மனியர்கள், எக்ஸ்புளோரரின் அனைத்து வெர்ஷன்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிகரித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், தாக்குதல்கள் நடத்துவது என்பது சிறிது கடினமானது; ஆனால், முழுவதுமாக பாதுகாப்பு அளிக்காது. எனவே, இணையதளத்தை பயன்படுத்தும், ஜெர்மனியர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக வேறு பிரவுசரை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தாமஸ் பாம்கார்ட்னர் கூறுகையில்,"ஜெர்மன் அரசின் எச்சரிக்கை குறித்து, மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூகுள் இணையதளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், குறிப்பிட்ட நோக்குடன், பெரியளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள், சாதாரண மக்கள் அல்லது நுகர்வோர்களுக்கு எதிராக நடைபெறாது'
நன்றி: தினமலர்
Wednesday, January 20, 2010
காயில் மாற்றிய கதை....
தொழிற்சாலையில் ஆர்டருக்கான ஆயத்த ஆடைகள் உற்பத்தி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. மணி முற்பகல் 11.30. சட்டென ஒரு புறத்தில் அமைந்த தையல் இயந்திரங்களுக்கான 'ஸ்டார்ட்டர்' மின் கட்டுப்பாட்டுக் கருவி 'டப்' என சத்தத்துடன் பழுதானது.
அருகில் இருந்த பொன்னுச்சாமி சட்டென அங்கே சென்று தனக்கு தெரிந்த அனுபவ அறிவைக் கொண்டு மின்சாதனத்தை சோதிக்க அதில் உள்ள ’காயில்’ புகைந்துவிட்டது. அதை மாற்றினால்தான் மீண்டும் இயந்திரங்கள் இயங்கும். என தெரிந்தது.
உற்பத்தி தடைபட்டதோடு அடுத்து எவ்வளவு நேரத்தில் ரெடியாகும் என்று தெரியாத நிலை. ஆஸ்தான மின் பழுது நீக்குபவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து விட்டனர்.
’காயிலை’ கழட்டி கையில் கொடுத்து புதியதாக வாங்கி வரச் சொல்ல இன்னொரு பணியாளரை அழைத்து அருகில் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மின்சாதன பொருள்கள் விற்கும் கடையில் அதை புதிதாக வாங்கி வரப் பணித்தார் பொன்னுச்சாமி
அங்கே அந்த கடையில் ’காயில்’இல்லை, தொழிற்சாலை அமைந்த இடம் சற்று நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது. இப்போது வேறு எங்கு கிடைக்கும் என விசாரித்தில் வடக்குபுறமாக மூன்று கிலோமீட்டர் சென்றால் அங்கு உள்ள சிற்றூரில் கிடைக்கும் அல்லது தெற்குபுறமாக சென்றால் ஐந்து கிலோமீட்டர் சென்று நகரை அடைந்தால் நிச்சயம் கிடைக்கும் என்று தகவல் சொன்னார்கள்.
நேரமாக, நேரமாக பொன்னுச்சாமிக்கு வேகமாக செயல்படவேண்டும் என உணர்ந்தார். இல்லையெனில் உற்பத்தி தடைபடும். மேலும் சம்பள இழப்பும் நேரும். அந்த பணியாளரை வடக்கு நோக்கி சென்று வாங்கிவ்ரப் பணித்தார். அங்கு இல்லையென்றால் திரும்ப வந்த வழியே அங்கிருந்து எட்டு கி.மீ வந்து டவுனை அடைய வேண்டும். இன்னும் நேரமாக வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இருந்தால் நேரம் மிச்சம். உற்பத்தி பாதிக்காது. ரிஸ்க் எடுத்தார்.
பணியாளர் வடக்கே சென்று அங்கு கடைகளில் விசாரிக்கத் துவங்க ’அங்கு இல்லை’ என்ற பதிலே கிடைத்தது. பொன்னுச்சாமிக்கு இயல்பாகவே காலதாமதம் என்றால் பிடிக்காது. ஏற்கனவே முக்கால் மணி நேரம் வீணாகி விட்டிருந்தது. இனி அந்த பணியாளர் திரும்பவந்து டவுன் சென்றால் கூடுதலாக இன்னும் அரைமணியிலிருந்து ஒருமணிநேரம் வீணாகும்.
பொன்னுச்சாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. சட்டென ஒரு யோசனை. பணியாளர் அங்கே முயற்சித்து கிடைக்க வில்லை எனில் உடனடியாக டவுனில் வேறுநபரை நியமித்து வாங்கிவிட்டால் பயணநேரம் அரைமணி மிச்சமாகும்.
பொன்னுச்சாமியின் வீடு டவுனில் இருந்தது. அருகிலேயே பெரிய மின்சாதன பொருள்கள் விற்கும் கடையும் இருந்தது. இந்த மதிய நேரத்தில் மனைவி வீட்டு வேலை முடித்துவிட்டு ஓய்வாக இருக்க வாய்ப்பு உண்டு. வீட்டு வேலை செய்ய வசதியான (நைட்டி) உடையில் இருந்தால் அப்படியே வீட்டைவிட்டு வெளியே வருவதை வெறுப்பவள்.
சரி ஆபத்திற்கு பாவமில்லை என மனைவியை உடைமாற்றி தயாராக இருக்கச் சொன்னால் ஒருவேளை அவசரமாக கடைக்குபோய் பொருளை வாங்கி வரச் செளகரியமாக இருக்கும் என முடிவு செய்தார்.
வீட்டிற்கு போன் செய்தார். போனை எடுத்த மனைவியிடம் ”ஆமா நீ நைட்டில இருக்கியா? இல்லை சேலைல இருக்கியா?”
”தேனுங்கோ என்ன விசயம்?”
இல்ல, அவசரமா எலக்ட்ரிகல் கடைக்கு போக வேண்டியதா இருக்கும். கொஞ்சம் சீக்கிரமா ரெடியாகு !”
”இதோ இரண்டு நிமிசத்துல ரெடியாகிடறோனுங்கோ” என்று போனை வைத்தார் அவரது மனைவி.
கிட்டத்தட்ட மொத்தமாக ஒருமணிநேரம் ஆயிற்று. பணியாளருக்கு போன் செய்ய, ஒருவழியாக கிடைத்து விட்டதாக அவர் கூறி விரைவாக தொழிற்சாலைக்கு வந்து கொண்டு இருப்பதாக தகவல் சொன்னார். வந்து அதைப் பொருத்த அரைமணிநேரம் ஆக ஒருவழியாய் இரண்டு மணிநேரத்திற்குள் இயல்புநிலை திரும்பியது.
பொன்னுச்சாமி சற்று நிம்மதியோடு மதிய உணவுக்காக வீடு திரும்பினார். வீடு வந்த போது மனைவி தேவையானால் வெளியே கிளம்பத் தயாராக இருக்க, பொறுமையாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அப்படியே தொழிற்சாலையில் உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகளை விவரித்தார்.
அக்கறையுடன் கேட்ட அவரது மனைவி புன்னகை செய்ய ”ஏன் சிரிக்கிற?” என்றார்
”அது வேறொண்ணுமில்லீங்க. திடீர்னு போனு பண்ணி நைட்டில இருக்கிறயா, இல்லை சேலையில இருக்கிரயான்னு கேட்டீங்களா எனக்கு ஒரு மாதிரியா ஆயிப்போச்சுங்கோ..” என்று நாணத்துடன் தலை கவிழ, பொன்னுச்சாமிக்கு சோறு உள்ளே இறங்கவில்லை.
அருகில் இருந்த பொன்னுச்சாமி சட்டென அங்கே சென்று தனக்கு தெரிந்த அனுபவ அறிவைக் கொண்டு மின்சாதனத்தை சோதிக்க அதில் உள்ள ’காயில்’ புகைந்துவிட்டது. அதை மாற்றினால்தான் மீண்டும் இயந்திரங்கள் இயங்கும். என தெரிந்தது.
உற்பத்தி தடைபட்டதோடு அடுத்து எவ்வளவு நேரத்தில் ரெடியாகும் என்று தெரியாத நிலை. ஆஸ்தான மின் பழுது நீக்குபவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து விட்டனர்.
’காயிலை’ கழட்டி கையில் கொடுத்து புதியதாக வாங்கி வரச் சொல்ல இன்னொரு பணியாளரை அழைத்து அருகில் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மின்சாதன பொருள்கள் விற்கும் கடையில் அதை புதிதாக வாங்கி வரப் பணித்தார் பொன்னுச்சாமி
அங்கே அந்த கடையில் ’காயில்’இல்லை, தொழிற்சாலை அமைந்த இடம் சற்று நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது. இப்போது வேறு எங்கு கிடைக்கும் என விசாரித்தில் வடக்குபுறமாக மூன்று கிலோமீட்டர் சென்றால் அங்கு உள்ள சிற்றூரில் கிடைக்கும் அல்லது தெற்குபுறமாக சென்றால் ஐந்து கிலோமீட்டர் சென்று நகரை அடைந்தால் நிச்சயம் கிடைக்கும் என்று தகவல் சொன்னார்கள்.
நேரமாக, நேரமாக பொன்னுச்சாமிக்கு வேகமாக செயல்படவேண்டும் என உணர்ந்தார். இல்லையெனில் உற்பத்தி தடைபடும். மேலும் சம்பள இழப்பும் நேரும். அந்த பணியாளரை வடக்கு நோக்கி சென்று வாங்கிவ்ரப் பணித்தார். அங்கு இல்லையென்றால் திரும்ப வந்த வழியே அங்கிருந்து எட்டு கி.மீ வந்து டவுனை அடைய வேண்டும். இன்னும் நேரமாக வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இருந்தால் நேரம் மிச்சம். உற்பத்தி பாதிக்காது. ரிஸ்க் எடுத்தார்.
பணியாளர் வடக்கே சென்று அங்கு கடைகளில் விசாரிக்கத் துவங்க ’அங்கு இல்லை’ என்ற பதிலே கிடைத்தது. பொன்னுச்சாமிக்கு இயல்பாகவே காலதாமதம் என்றால் பிடிக்காது. ஏற்கனவே முக்கால் மணி நேரம் வீணாகி விட்டிருந்தது. இனி அந்த பணியாளர் திரும்பவந்து டவுன் சென்றால் கூடுதலாக இன்னும் அரைமணியிலிருந்து ஒருமணிநேரம் வீணாகும்.
பொன்னுச்சாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. சட்டென ஒரு யோசனை. பணியாளர் அங்கே முயற்சித்து கிடைக்க வில்லை எனில் உடனடியாக டவுனில் வேறுநபரை நியமித்து வாங்கிவிட்டால் பயணநேரம் அரைமணி மிச்சமாகும்.
பொன்னுச்சாமியின் வீடு டவுனில் இருந்தது. அருகிலேயே பெரிய மின்சாதன பொருள்கள் விற்கும் கடையும் இருந்தது. இந்த மதிய நேரத்தில் மனைவி வீட்டு வேலை முடித்துவிட்டு ஓய்வாக இருக்க வாய்ப்பு உண்டு. வீட்டு வேலை செய்ய வசதியான (நைட்டி) உடையில் இருந்தால் அப்படியே வீட்டைவிட்டு வெளியே வருவதை வெறுப்பவள்.
சரி ஆபத்திற்கு பாவமில்லை என மனைவியை உடைமாற்றி தயாராக இருக்கச் சொன்னால் ஒருவேளை அவசரமாக கடைக்குபோய் பொருளை வாங்கி வரச் செளகரியமாக இருக்கும் என முடிவு செய்தார்.
வீட்டிற்கு போன் செய்தார். போனை எடுத்த மனைவியிடம் ”ஆமா நீ நைட்டில இருக்கியா? இல்லை சேலைல இருக்கியா?”
”தேனுங்கோ என்ன விசயம்?”
இல்ல, அவசரமா எலக்ட்ரிகல் கடைக்கு போக வேண்டியதா இருக்கும். கொஞ்சம் சீக்கிரமா ரெடியாகு !”
”இதோ இரண்டு நிமிசத்துல ரெடியாகிடறோனுங்கோ” என்று போனை வைத்தார் அவரது மனைவி.
கிட்டத்தட்ட மொத்தமாக ஒருமணிநேரம் ஆயிற்று. பணியாளருக்கு போன் செய்ய, ஒருவழியாக கிடைத்து விட்டதாக அவர் கூறி விரைவாக தொழிற்சாலைக்கு வந்து கொண்டு இருப்பதாக தகவல் சொன்னார். வந்து அதைப் பொருத்த அரைமணிநேரம் ஆக ஒருவழியாய் இரண்டு மணிநேரத்திற்குள் இயல்புநிலை திரும்பியது.
பொன்னுச்சாமி சற்று நிம்மதியோடு மதிய உணவுக்காக வீடு திரும்பினார். வீடு வந்த போது மனைவி தேவையானால் வெளியே கிளம்பத் தயாராக இருக்க, பொறுமையாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அப்படியே தொழிற்சாலையில் உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகளை விவரித்தார்.
அக்கறையுடன் கேட்ட அவரது மனைவி புன்னகை செய்ய ”ஏன் சிரிக்கிற?” என்றார்
”அது வேறொண்ணுமில்லீங்க. திடீர்னு போனு பண்ணி நைட்டில இருக்கிறயா, இல்லை சேலையில இருக்கிரயான்னு கேட்டீங்களா எனக்கு ஒரு மாதிரியா ஆயிப்போச்சுங்கோ..” என்று நாணத்துடன் தலை கவிழ, பொன்னுச்சாமிக்கு சோறு உள்ளே இறங்கவில்லை.
Subscribe to:
Posts (Atom)